சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

மூன்றாவது மீனுக்கு என்ன ஆச்சு?

ஒரு கிராமத்தில் உள்ள குளத்தில் மூன்று மீன்கள் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. ஒரு நாள், அந்த குளத்தின் வழியாக சென்ற சில மீனவர்கள், அங்கே நிறைய மீன்கள் இருப்பதை கண்டனர். அவர்களில் ஒரு மீனவர், “இங்கே பாருங்கள்! இந்த குளத்தில் நிறைய மீன்கள் உள்ளன! இப்போது மாலை நேரம் ஆகிவிட்டது. நாம் நாளை காலை வந்து அனைத்து மீன்களையும் பிடிக்க வேண்டும்” என்று சொன்னார்.

மீனவர் சொன்னதை கேட்ட, மூன்று மீன்களில் ஒரு புத்திசாலி மீன், மற்ற இரண்டு மீன்களையும் அழைத்து, “மீனவர் என்ன சொன்னார் என்பதை நீங்கள் கேட்டீர்களா? இன்றிரவு இந்த குளத்தில் இருந்து வெளியேறி, விரைவாக ஒரு பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும்”, என்று சொன்னது.

இரண்டாவது மீன் அதனை ஏற்றுக்கொண்டு, “நாம் இனி இங்கே இருக்க வேண்டாம்” என்று சொன்னது. ஆனால் மூன்றாவது மீன் மற்ற இரு மீன்களும் சொன்னதைக் கேட்டு சிரிக்க ஆரம்பித்தது. “இது தான் நம்முடைய வாழ்விடம், நாம் இங்கிருந்து வேறு எங்கும் ஓடக்கூடாது”, என்றது.

மூன்றாவது மீனை சமாதானப்படுத்த முடியாமல், மற்ற இரு மீன்களும் அந்தக் குளத்தில் இருந்து அன்றிரவே வெளியேறின. அடுத்த நாள், மீனவர்கள் அந்த குளத்தில் ஒரு பெரிய வலையை விரித்து நிறைய மீன்களை பிடித்தனர். மூன்றாவது மீன் மற்ற மீன்கள் சொன்னதை கேட்டிருந்தால், அது அப்படி பிடிபட்டிருக்காது.

நீதி: சிந்தித்து, புத்திசாலித்தனமாக செயல்பட்டு பிரச்சனையைத் தவிர்க்க வேண்டும்.

Act Wisely

Three fish were very close friends in a village pond. One day, some fishermen passing through that pond saw plenty of fishes. One of the fisherman said, “hey look here, so many fishes in this pond! It is already evening now. We should come tomorrow morning and catch them all”.

Hearing the fisherman, one of the three fishes, who was the wisest of them all called the other two fishes and said, “Did you hear what the fisherman said? We should leave this pond tonight itself, and move to a safe place quickly”.

The second fish agreed to him and said, “I think we should not be here anymore”. But the third fish started laughing for what both fishes said. It replied, “This is our home. We should not run away like this”.

Unable to convince the third fish, the other two left the pond that night. The next day, the fishermen put a big net in that pond and caught a plenty of fishes. Third fish was one among them. If it had listened to other two fishes, it wouldn’t have been caught like that.

Moral : Think and act wisely to avoid problem.

Recent posts

வார்த்தைகளை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள்

ஒரு காலத்தில் முதியவர் ஒருவர் தனது அண்டை வீட்டுக்காரரை திருடன் என்று வதந்தியை பரப்பினார். இதன் விளைவாக அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். நாட்கள் ஓடின, இளைஞனும்...
Thamil Paarvai

மூன்று வகையான மக்கள்

ஆசிரியர் மாணவர்களிடம் மூன்று பொம்மைகளை காட்டி, அதில் உள்ள வேறுபாடுகளை மாணவ்ரகளை கண்டுபிடிக்கும்படி கேட்டார். மூன்று பொம்மைகளும் ஒரே மாதிரி வடிவம், அளவை கொண்டது. மிகுந்த கவனிப்புக்குப்...
Thamil Paarvai

ஓநாய்.. ஓநாய்..

ஒரு கிராமத்தில், ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருமுறை அவன் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது, கிராமவாசிகளுக்கு விளையாட்டு காட்ட நினைத்தான். உடனே “ஓநாய்.....
Thamil Paarvai

முட்டாள்தனமான நாரை

ஒரு நாள் நாரை மிகுந்த பசியுடன் இருந்தது, அதற்கான உணவைத் தேடி கூட்டிலிருந்து வெளியே வந்தது. நாரை, மீன் பிடிக்க ஆற்றங்கரைக்கு சென்று மீனுக்காக காத்துக்கொண்டிருந்தது. நாரை...
Thamil Paarvai

ஆழம் தெரியாமல் காலை விடாதே

ஒரு நரி கிணற்றின் பக்கமாக நடந்து சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக அது கிணற்றினுள் விழுந்தது. அது தன்னால் முடிந்த வரை வெளியே வர முயற்சித்தது, அதனால்...
Thamil Paarvai

தவறு யாருடையது?

எலியும், தவளையும் நண்பர்களாக இருந்தனர். ஒவ்வொரு காலையிலும் தவளை தன் குளத்தில் இருந்து வெளியேறி தனது நண்பனை சந்திக்கச் செல்லும். எலி அதற்கும் நீச்சல் கற்றுக்கொடுக்க தவளையிடம்...
Thamil Paarvai

மறைக்கப்பட்ட புதையல்

ஒரு விவசாயிக்கு ஐந்து மகன்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் சோம்பேறிகளாக இருந்தனர். அவர்களை கடுமையாக உழைக்கும் இளைஞர்களாகப் பார்க்க அந்த விவசாயி விரும்பினார். அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி...
Thamil Paarvai

பேராசை கொள்ளாதீர்கள்

ஒருமுறை ஒரு நாய் மிகவும் பசியாக இருந்தது. அது எல்லா இடங்களிலும் உணவுக்காக அலைந்தது, கடைசியில் ஒரு எலும்பு துண்டை கண்டது. அது தன் வாயில் எலும்பு...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 07

1. பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எறும்பு. In the species of insects, ant has high knowledge. 2. ஆச்சரியமான விஷயங்களை பார்க்கும் போது...
Thamil Paarvai

Leave a Comment