ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை டோக்கியாவில் நடக்கிறது. பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் பதக்கம் வெல்வதற்காக இந்திய வீரர்கள்- வீராங்கனைகள் பல்வேறு இடங்களில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று மத்திய இளைஞர்கள் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள்- வீராங்கனைகள் அணியும் சீருடையை அறிமுகம் செய்து வைத்தார்.
‘‘பிரதமர் மோடி ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுவது குறித்து தெரிந்து கொள்ள ஆய்வு கூட்டம் நடத்தினார். அப்போது விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்த அனைவருக்கும் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார் என கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.