கட்டுரை மொழி இலக்கியம்

தமிழர்களின் விருந்தோம்பல்

விருந்து என்ற சொல்லுக்குப் புதுமை என்பது பொருள். உறவினரும் நண்பரும் அல்லாதவராய் புதியராக நம்மிடம் வரும் மக்களை விருந்து என்றனர் தமிழர். நம் வீட்டுக்கு வரும் ஒவ்வொரு உறவினர்களையும், நண்பர்களையும் இன்முகத்துடன் வரவேற்று, இருப்பதைக் கொண்டு அன்புடன் மனதார செய்யும் உபசரிப்பு தான் விருந்தோம்பல்.

அன்றையக் காலத்தின் வழக்கம் :

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி என்று அனைவராலும் போற்றப்படும் தமிழ் மக்களின் பண்பாட்டை சிறப்பிக்கும் வகையில் திருவள்ளுவர், விருந்தோம்பலுக்கு என்று தனி அதிகாரம் படைத்து அதில் உள்ள பத்து குறள்களில் விருந்தோம்பலின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு.

வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும், என்பது பொருள். தன் வீட்டிற்கு வந்தவர்களுக்கு முதலில் ஒரு சொம்பு தண்ணீர் தருவதை நம் தமிழர்கள் பழக்கமாக வைத்திருப்பர். இதற்கு காரணம் வந்திருப்பவர்கள் வெயிலில் கஷ்டப்பட்டு வந்திருக்கக் கூடும். களைப்பாக இருக்கக்கூடும் என்பதால்தான். இன்று நாம் அதைக்கூட செய்கிறோமா என சற்றே சிந்தித்து பார்க்க வேண்டியதாக உள்ளது.

இலக்கண நு}லான தொல்காப்பியம், சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை நு}ல்களான நற்றிணை, புறநானு}று, பத்துப்பாட்டு நு}லான சிறுபானாற்றுப்படை, காப்பிய நு}லான சிலப்பதிகாரம் ஆகிய நு}ல்களிளும் விருந்தோம்பலின் சிறப்பு இடம்பெற்றுள்ளது.

இன்றைய நடைமுறையில் இருப்பது :

இவ்வளவு சிறப்பு மிக்க விருந்தோம்பல் இன்றைய அவசர உலகில் எப்படி இருந்துக் கொண்டு வருகிறது? விருந்தினரை எதிர்பார்க்கும் காலம் போய், விருந்தாளிகளாக வருபவர்கள் யார் வீட்டிற்கு செல்கின்றோமோ அவர்களிடம் முன் கூட்டியே அறிவிக்கும் காலம் வந்துவிட்டது. மேலும் யாராவது விருந்தாளியாய் வீட்டுக்கு வந்து விடுவார்களோ என அச்சம் கொள்வதை நாம் பல இடங்களில் பார்க்க முடிகின்றது. அப்படி வீட்டிற்கு ஒருவர் வந்து விட்டாலும், அவர்களுக்கு ஒரு காஃபி போட்டு வைக்கக்கூட யோசிக்கும் சிலரை பார்க்கிறோம். அதிலும் நாசுக்காக சிலர் சொல்வதை கேட்டிருக்கிறேன். நீங்க சாப்பிட்டு போங்கன்னு சொன்னா இருக்கவா போறீங்க சமைச்சு வச்சிட்டுல்ல வந்திருப்பீங்க, என்று சொல்வதை கேட்டதும், அங்கே அதற்கு மேல் இருக்க தோணுமா என்ன? இன்னும் சிலர் நாம் போனதிலிருந்து பேசிக் கொண்டே இருப்பர். சரி கிளம்புறேன் எனக் கூறிவிட்டு கிளம்பும்போது, இப்படி காஃபி கூட குடிக்காம போறீங்களே? என்று கூறுபவர்களையும் பார்க்கிறோம். வீட்டிற்கு ஒருவர் வரும் போது நாம் அன்போடு நம்மால் இயன்றதை பரிமாறும் போது அதன் சந்தோஷமும், மகிழ்ச்சியும் பெரிய விஷேச விருந்துகளில் கூட கிடைக்காது.

பழங்காலம் உணவு விடுதிகள் இல்லாத காலம். வெளியூர்க்குச் செல்வோர் பலநாளுக்கு வேண்டிய உணவினைக் கொண்டு செல்ல இயலாது. அரசர்கள், செல்வர்கள், வணிகர்கள் போன்றோர் மற்ற பகுதிகளுக்கு செல்லும் போது தேர்களிலும், மற்ற ஊர்திகளிலும் உணவிற்குத் தேவையானப் பொருள்களைக் கொண்டு சென்றனர். மற்றவர்கள் உணவையோ, உணவுப் பொருள்களையோ கொண்டு செல்ல முடியாத நிலையிருந்தது. அதனால் உணவின்றி வருந்துவோருக்கு உணவளித்தல் இன்றியமையாத அறமாகப் போற்றப்பெற்றது. இக்காலத்தில் உணவு விடுதிகள் பெருகியுள்ளன. எப்பொருள் எங்கு வேண்டுமென்றாலும் பெறலாம். பல நாள்களுக்கு வைத்துக் கொள்ளும்படியான பல உணவு வகைகள் கிடைக்கின்றன. அதனால் இப்பொழுது விருந்தோம்பல் என்பது செல்வச் செழிப்பைக் காட்டுவதற்காகவும் பயனை எதிர்பார்த்துச் செய்வதற்காவும் மேற்கொள்ளப்படுகிறது.

எனவே இந்த விருந்தோம்பல் என்ற சிறப்பான விஷயத்தை உணர்ந்து, அதை அவ்வபோது நாம் பழக்கத்தில் கொண்டு செயல்படுத்தி, நம் சந்ததியினரும் அதை பழக்கத்தில் கொண்டு செயல்படுத்த ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும்.

Recent posts

உலகப் பெண்களின் உடல் நலம்: ஓர் உலகளாவிய ஆய்வு (2025-2026)

பெண்களின் உடல் நலம் என்பது உயிரியல், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சாரக் காரணிகளின் சிக்கலான இணைப்பாகும். உலகம் முழுவதும், பெண்கள் தனித்துவமான உடல்நல சவால்களை எதிர்கொள்கின்றனர் –...
Thamil Paarvai

இலங்கையின் நந்திக்கடல்: வரலாற்றின் சாட்சியாகும் ஒரு கடற்காயல்

இலங்கையின் வடகிழக்குக் கடற்கரையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள நந்திக்கடல் (Nanthi Kadal) ஒரு வெறும் புவியியல் அமைப்பு மட்டுமல்ல; அது இலங்கையின் நவீன வரலாற்றின் முக்கிய சின்னமாகவும்,...
Thamil Paarvai

மீன்வளம், சூழலியல் மற்றும் மீள்வாழ்வின் பாதை (கட்டுரையின் இரண்டாம் பகுதி)

நந்திக்கடல்: முந்தைய கட்டுரையில் நந்திக்கடலின் வரலாறு, புவியியல் மற்றும் போரின் தாக்கம் ஆகியவற்றை விரிவாகப் பார்த்தோம். இப்போது, அந்தப் பகுதியின் தற்போதைய நிலை, மீன்வள ஆய்வுகள், சூழலியல்...
Thamil Paarvai

காலம் ஒரு நதி போன்றது

மாலை ஆறு மணிக்கெல்லாம் வீதிகள் அமைதியடையத் தொடங்கும் ஒரு சிறிய கிராமம் அது. திருநெல்வேலி மாவட்டத்தின் கிழக்கே, தாமிரபரணியின் கிளை நதி ஒன்றின் கரையில் அமைந்திருந்தது அந்த...
Thamil Paarvai

மண்ணில் எழுவோம்!!! ஒளியில் நிலைப்போம்!!!

“மண்ணில் எழுவோம்!!! ஒளியில் நிலைப்போம்!!!” இந்த வாசகம் பொறிக்கப்பட்ட ஒரு பழைய கல் தூண், கோவில்பட்டிக்கு அருகிலுள்ள ஒரு சிறிய கிராமத்தின் நுழைவாயிலில் நின்றுகொண்டிருந்தது. எத்தனை வருடங்களாக...
Thamil Paarvai

மண்ணுக்குள் மறைந்த உண்மைகள்!

“வரலாறு என்பது வெற்றியாளர்களால் எழுதப்படுவது; ஆனால் உண்மை எப்போதும் மண்ணுக்குள் புதைந்து கிடக்கிறது.” யாழ்ப்பாணம். இந்தப் பெயரைக் கேட்டவுடன் நம் கண்முன் வருவது கடல், தென்னைமரங்கள், நல்லூர்...
Thamil Paarvai

மண்ணுக்குள் புதைந்த ஓர் இனத்தின் அழுகை

“புதைக்கப்பட்ட உடல்கள் மௌனமாக இருந்தன; ஆனால் அவற்றின் எலும்புகள் ஒவ்வொன்றும் ஒரு கதையைக் மண் பேசத் தொடங்கும் இடம். யாழ்ப்பாணம். தென்னை மரங்களும், கடலும், நல்லூர் கந்தசுவாமி...
Thamil Paarvai

ஐந்தாயிரம் ஆண்டுகளைத் தாண்டிய பயணம்

தமிழர் பண்பாட்டின் தனித்துவம்: காலத்தை வென்ற கலை, நாகரிகம் மற்றும் அடையாளம் “உலகின் மிகப் பழமையான மொழி தமிழ்; உலகின் மிக அழகான பண்பாடு தமிழர் பண்பாடு.”...
Thamil Paarvai

உடலின் மொழி, உணர்வின் வெளிப்பாடு

பரதநாட்டியம்: 108 கரணங்களும், 28+23 முத்திரைகளும் – கல்லில் உறைய வைக்கப்பட்ட தெய்வீக இயக்கங்கள் “ஒரு கையசைவில் கடல் பொங்கும்; ஒரு பார்வையில் உலகமே சிரிக்கும். இதுவே...
Thamil Paarvai

Leave a Comment