கவிதை மொழி இலக்கியம்

கவிதைகள் 02

இதமாக..!

என்னவளே!..
உன் புன்னகை கண்டு உன்னிடம்
பேசி மகிழ வந்தேன்!
உன் சுடர் விழிப்பார்வையால் சூடாகினாய்..
அதுகூட இதமாகத்தான் இருந்தது..
தற்பொழுது பெய்த மழையின் குளிருக்கு..!

புதுமைப்பெண்

பெண்ணை பெண்ணால் கொல்லும்
இந்த ஆணுலகில் மீண்டு வந்து
இம்மண்ணுலகில் வெற்றிப் பாதையில் தடம்
பதித்து கொண்டிருக்கும் என் பெண்ணினமே நீ
கடந்து வந்த பாதை என்ன பூப்பாதையா..
அல்ல அல்ல அது தீப்பாதை..
முடிந்ததோ அந்தப் பாதை
அல்ல அல்ல முயற்சிப்பாள்
என்றும் என் கோதை..
மேதை என பல மேடைகள் ஏறி
அவள் சாதனை செய்வாள்
சாகசம் புரிவாள்..
வெற்றிக் கனி அது எட்டாக்கனி..
என நினைக்கும் எம் பால் பெண்களுக்கு
வெற்றிப் பாதைகள் பல வழி திறப்பாள்
எடுத்துக்காட்டாய் அவள் என்றுமே இருப்பாள்
அவள் தான் எங்கள் புதுமைப்பெண்

அமைதி!

இறுகிய மனதுடன்
எனது பயணம்
வெளியே தூறல்
மனதுக்குள் குமுறல்
பாசமில்லா உலகில்
பாசாங்குடன் சிலர்
அமைதியை தேடி
அமைதியுடன் நான்…

வேண்டும்..!

பூலோகத்திலே ஒரு தோழி வேண்டும் புதுமைகள் நான் செய்திட
அனுதினமும் ஆனந்தமாய் ஆகிட
சோகத்தில் நான் சாய்கையில் தோளினை நீ தரவேண்டும்
கல்லூரி சாலையிலே கவி பாட வேண்டும்
கவிதையின் உச்சம் எனக்குள் காதலாய் மாற வேண்டும்
வஞ்சகமில்லா நெஞ்சங்கள் வேண்டும்
வாழ்விலே பல மாற்றங்கள் வேண்டும்
உன் புன்முறுவல் சிரிப்பில் புதைந்து போக வேண்டும்
சோகங்கள் எல்லாம் பூவாய் இதழாய் பூத்து குலுங்க வேண்டும்
என் வாழ்நாள் எல்லாம்..
தாய்வழி சொந்தமில்லை நீ எனக்கு..
இந்த தரணியிலே உன்னை அன்றி வேறு பந்தமில்லை நீ எனக்கு..
நாட்கள் எல்லாம் வாரங்கள் ஆகும்..
வாரங்கள் தோறும் மாதங்கள் ஆகும்..
மகிழ்ச்சியில் இன்பம் பொங்கும்!!

கண்ணீர்..!

தினந்தோறும்
அழுகிறேன் – என்
கண்ணீருக்கு பின்னால்
இருப்பது யார் என்று
எனக்கும் – என்
கண்ணீருக்கும் மட்டும் தான்
தெரியும்
அது
நீ என்று…

Recent posts

கனவு

காலை எழுந்ததும் தினசரி வேலைகள் செய்தால் அவள். தன் இரண்டு வயது குழந்தை எழுவதற்கு முன் கணவரை அலுவலகம் அனுப்பி வைக்க வேண்டும்.  அவசரம் அவசரமாக செய்தால்...
Thamil Paarvai

மனித ஊனம்

ராமு தன் மனைவி செல்விக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கிறான் இது மூன்றாவது பிரசவம்.ஏற்கனவே இரு பெண்பிள்ளைகள் உள்ளனர். பெரிய மகள் புவனாவிற்கு பத்து வயதாகிறது.சிறிய...
Thamil Paarvai

பெண் என்பவள்…

ரமா என்பவள் மிகவும் திறமை வாய்ந்தவள். தான் வேலை செய்யும் இடத்தில் வேலை செய்த நேரம் போக கவிதைகள் எழுதி வருவாள். கவிதை போட்டிகளுக்கு கவிதை அனுப்புவாள்....
Thamil Paarvai

பெண்கள் 

ஓர் அழகிய மலை கிராமத்தில் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் அவள் பிறந்தாள். ஆனால் அவள் தந்தைக்கோ, இளவரசியை பெற்றதைப்போல் பெரு மகிழ்ச்சி. அந்த மாபெரும் கூட்டு...
Thamil Paarvai

கோவலனின் வருகையால் வியப்படைந்த ஊர்மக்கள்…!!

இறைவனாலும் இயலாத செயல்:  பதினான்கு நாட்கள் சங்கமனின் மனைவி காத்திருந்து அவளுடைய கணவனுடன் இணைந்தாள். நீயும் அவளைப் போன்றே பதினான்கு நாட்கள் பொறுத்திருந்து கோவலனோடு மீண்டும் இணைவாய்....
Thamil Paarvai

பாண்டிய நாட்டின் நிலையை கேட்டறிந்த அரசன்..!!

ஆணையும், வாய்ப்பும்  செய்த தவறினை உணர்ந்து கையேந்தி நின்ற தனது தாயிடம் மாதவி, என் மகளை வளர்க்கும் வாய்ப்பினை உமக்கு தருகின்றேன். ஆனால் எக்காரணம் கொண்டும் அவளை...
Thamil Paarvai

சகல அலங்காரங்களோடு.. காட்சியளித்த கண்ணகி..!!

சிலப்பதிகாரம்…!!  நீலன், அரசனை வணங்கி தொழுத பின்பு சோழனும், பாண்டியனும் கூறிய உரையைக் கூறத் துவங்கினான்.  வீரத்தோடு போர்க்களத்தில் நில்லாமல் வாளையும், குடையையும் போட்டுவிட்டு தன் உயிரை...
Thamil Paarvai

கவிதைகள் 01

வெற்றிபெறும் நேரத்தைவிட நாம் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழும் நேரமே நாம் பெறும் பெரிய வெற்றி… நித்திரை மறந்திட முத்திரை பதித்த சித்திரமே.. மொட்டாய் பிறந்து பூவாய் மலர்ந்த...
Thamil Paarvai

என்னோட சீட் .

சேலத்திலிருந்து கோயமுத்தூருக்கு பஸ் கிளம்ப போகிறது. அதற்குள் உட்கார்ந்திருந்த சாமியப்பனுக்கு ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கி வந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டார். பஸ்ஸைவிட்டு இறங்க வேண்டும்....
Thamil Paarvai

Leave a Comment