கவிதை மொழி இலக்கியம்

கவிதைகள் 02

இதமாக..!

என்னவளே!..
உன் புன்னகை கண்டு உன்னிடம்
பேசி மகிழ வந்தேன்!
உன் சுடர் விழிப்பார்வையால் சூடாகினாய்..
அதுகூட இதமாகத்தான் இருந்தது..
தற்பொழுது பெய்த மழையின் குளிருக்கு..!

புதுமைப்பெண்

பெண்ணை பெண்ணால் கொல்லும்
இந்த ஆணுலகில் மீண்டு வந்து
இம்மண்ணுலகில் வெற்றிப் பாதையில் தடம்
பதித்து கொண்டிருக்கும் என் பெண்ணினமே நீ
கடந்து வந்த பாதை என்ன பூப்பாதையா..
அல்ல அல்ல அது தீப்பாதை..
முடிந்ததோ அந்தப் பாதை
அல்ல அல்ல முயற்சிப்பாள்
என்றும் என் கோதை..
மேதை என பல மேடைகள் ஏறி
அவள் சாதனை செய்வாள்
சாகசம் புரிவாள்..
வெற்றிக் கனி அது எட்டாக்கனி..
என நினைக்கும் எம் பால் பெண்களுக்கு
வெற்றிப் பாதைகள் பல வழி திறப்பாள்
எடுத்துக்காட்டாய் அவள் என்றுமே இருப்பாள்
அவள் தான் எங்கள் புதுமைப்பெண்

அமைதி!

இறுகிய மனதுடன்
எனது பயணம்
வெளியே தூறல்
மனதுக்குள் குமுறல்
பாசமில்லா உலகில்
பாசாங்குடன் சிலர்
அமைதியை தேடி
அமைதியுடன் நான்…

வேண்டும்..!

பூலோகத்திலே ஒரு தோழி வேண்டும் புதுமைகள் நான் செய்திட
அனுதினமும் ஆனந்தமாய் ஆகிட
சோகத்தில் நான் சாய்கையில் தோளினை நீ தரவேண்டும்
கல்லூரி சாலையிலே கவி பாட வேண்டும்
கவிதையின் உச்சம் எனக்குள் காதலாய் மாற வேண்டும்
வஞ்சகமில்லா நெஞ்சங்கள் வேண்டும்
வாழ்விலே பல மாற்றங்கள் வேண்டும்
உன் புன்முறுவல் சிரிப்பில் புதைந்து போக வேண்டும்
சோகங்கள் எல்லாம் பூவாய் இதழாய் பூத்து குலுங்க வேண்டும்
என் வாழ்நாள் எல்லாம்..
தாய்வழி சொந்தமில்லை நீ எனக்கு..
இந்த தரணியிலே உன்னை அன்றி வேறு பந்தமில்லை நீ எனக்கு..
நாட்கள் எல்லாம் வாரங்கள் ஆகும்..
வாரங்கள் தோறும் மாதங்கள் ஆகும்..
மகிழ்ச்சியில் இன்பம் பொங்கும்!!

கண்ணீர்..!

தினந்தோறும்
அழுகிறேன் – என்
கண்ணீருக்கு பின்னால்
இருப்பது யார் என்று
எனக்கும் – என்
கண்ணீருக்கும் மட்டும் தான்
தெரியும்
அது
நீ என்று…

Recent posts

கவிதைகள் 01

வெற்றிபெறும் நேரத்தைவிட நாம் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழும் நேரமே நாம் பெறும் பெரிய வெற்றி… நித்திரை மறந்திட முத்திரை பதித்த சித்திரமே.. மொட்டாய் பிறந்து பூவாய் மலர்ந்த...
Thamil Paarvai

என்னோட சீட் .

சேலத்திலிருந்து கோயமுத்தூருக்கு பஸ் கிளம்ப போகிறது. அதற்குள் உட்கார்ந்திருந்த சாமியப்பனுக்கு ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கி வந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டார். பஸ்ஸைவிட்டு இறங்க வேண்டும்....
Thamil Paarvai

கடல் அலை.

இருள் சூழ்ந்து கொண்டிருந்த வேளையிலும் கடலையே வெறித்து பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்த வயதானவரை நேரமாகிவிட்டது என்று குழந்தைகளையும், ஒருசிலர் தங்களுடைய கணவன்மார்களையும் இழுத்துக் கொண்டு சென்றவர்கள் வியப்பாய்...
Thamil Paarvai

கவசத்திற்குள் இரு ஆவி.

வாயுவேக வீரர்கள் இருவர். அவர்தம் கொள்கைகளை நிலைநாட்டும் முகத்தான் போட்டி ஒன்றை துவக்கி மோதுகிறார்கள்! சர். காரெய்ன் மற்றும் சர். டாரண்ட் ஆகிய இரு வீரர்கள் சாகும்...
Thamil Paarvai

காவி உடைக்குள் ஒரு காவியம்.

இலங்கையில் வடமேல் மாகாணத்தில் அமைதியான ஒரு சிங்களக் கிராமம். பசுமையான வயல்வெளிகளும் தென்னந்தோப்புகளும் பாக்கு, கித்துல், மா, பலா, வாழை மரங்களும் செழித்து வளரும் விவசாயக்கிராமம். முன்னாள்...
Thamil Paarvai

குருவி குஞ்சு.

கஞ்சப்பனுக்கு பசி உயிரடுத்தது,காலையில் விழித்து எழுந்தவனுக்கு பசி வயிற்றை கிள்ளவும், ஏதோ கத்தியபடி பாத்திரங்களை உருட்டிக்கொண்டிருந்த அம்மாக்காரியிடம் கஞ்சிக்கு போய் நின்றபோது, இவன் அப்பன்காரன் அவள் மறைத்து...
Thamil Paarvai

தமிழர்களின் விருந்தோம்பல்

விருந்து என்ற சொல்லுக்குப் புதுமை என்பது பொருள். உறவினரும் நண்பரும் அல்லாதவராய் புதியராக நம்மிடம் வரும் மக்களை விருந்து என்றனர் தமிழர். நம் வீட்டுக்கு வரும் ஒவ்வொரு...
Thamil Paarvai

Leave a Comment