
ரமா என்பவள் மிகவும் திறமை வாய்ந்தவள். தான் வேலை செய்யும் இடத்தில் வேலை செய்த நேரம் போக கவிதைகள் எழுதி வருவாள். கவிதை போட்டிகளுக்கு கவிதை அனுப்புவாள். புலனக் குழுக்களில் உள்ள போட்டிகளுக்கு கவிதைகள் அனுப்புவாள் முதல் பரிசை வென்று விடுவாள். ஆனால் அவள் வேலை பார்க்கும் இடத்தில் உள்ள மற்றொரு பெண் ஊழியர் ரமாவின் திறமையைப் பார்த்து பொறாமைபட்டாள். எஜமானியிடம் இவள் சரியாக வேலை செய்யவில்லை, இவளுடைய வேலையை நான் தான் செய்து கொண்டிருக்கிறேன். இவள் கவிதை எழுதிக் கொண்டு பொழுதை போக்கிக் கொண்டிருக்கிறாள். இவளுக்கு சம்பளத்தை குறைத்துக் கொடுங்கள் என்று சொல்லிவிட்டாள். ரமா பயந்து கொண்டே எஜமானி அம்மாவை பார்க்க செல்கின்றாள். எஜமானி அம்மா எடுத்த எடுப்பிலேயே என்ன நீ முதலாளி அம்மா மாதிரி நடந்துக்கிற, நான் வேலைக்கார அம்மாவா ? நீ முதலாளியா? என்ன சமாச்சாரம்? என்று அதட்டுகிறார் எஜமானி அம்மாள். நடுநடுங்கி விடுகிறாள் ரமா. நம்ம இந்தியாவை விட்டு இங்கு வேலைக்கு வந்து இருக்கின்றோம். நம்ம இந்திய பெண்மணி தான் இந்த அம்மாவும். நமக்கு மதிப்பு கொடுப்பதில்லை என்ன செய்யலாம். நாடு விட்டு நாடு நம்ப வந்திருக்கிறோம். இது பெண்ணா? பெண்ணுக்கு பெண்ணே எதிராளியா? பொல்லாத உலகம் அப்பா!…… என்று மனதுக்குள் முணுமுணுத்தாள் ரமா. என்ன உங்க நாட்டுக்கு அனுப்பிச்சுடட்டுமா? நீங்களும் அங்கிருந்து தானே வந்திருக்கீங்கன்னு மனசுக்குள் மீண்டும் ஒருமுறை முணுமுணுத்தாள். நானும் இங்க தமிழ்நாட்டுல தான் இருந்து வந்திருக்கிறேன் சொல்றியா?ன்னு கத்துகிறாள் எஜமானி அம்மா இல்லைங்க அம்மா.. நான் எதுவுமே நினைக்கல.. நான் வேலை செஞ்ச நேரம் போக…. தூங்காமல் அந்த நேரத்தில் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். தமிழ் மீது எனக்கு ஆவல் அதிகம் அதுவும் எழுத்தின் மீது எனக்கு ஆவல் அதிகம் அதுதான் அம்மா. என்ன? உளறிகிட்டு, பைத்தியக்காரி மாதிரி என்கிட்ட இந்த உளறல் வைத்துக் கொள்ளாதே! இல்லைங்க அம்மா.. இனிமேல் நான் அப்படி செய்யமாட்டேன் என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுகின்றாள் ரமா. இந்தியாவிலிருந்து வரும் பத்திரிகைகளில் தமிழ் பத்திரிக்கையை, ரமா ஃபோனை வைத்துக் கொண்டு ஆன்லைனில் படிக்கிறாள். இதை கவனித்துவிட்டார் எஜமானி அம்மா. என்னடி? இப்ப நீ ஃபோன வச்சு பேப்பர் படிச்சிட்டு இருக்குற. வேலையை கவனிக்கிற மாதிரி இல்லையே? அம்மா அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைம்மா.. நான் வேலையை நல்லா கவனிச்சுகிட்டுதான் இருக்கிறேன். பத்திரிக்கையை படித்து முடித்த ரமாவுக்கு கடைசி பக்கத்தில் மிக்க மகிழ்ச்சியான அதிர்ச்சி தந்தது. மகளிர் தின கவிதை போட்டியில் முதல் பரிசை ஐயாயிரம் பெற்றுவிட்டதாகவும், ரமாவின் புகைப்படத்துடன் பாராட்டி வந்தததையும் படித்தாள். அளவு இல்லாத மகிழ்ச்சி அடைந்தாள். எஜமான் திட்டினதும் சக ஊழியர்கள் அனைவரும திட்டினதும், அனைவரும் நம்மில் பொறாமைபட்டது என அத்தனை கவலைகளும் ரமாவுக்கு பறந்தோடி விட்டது. முயற்சி இருந்தால் முடியாதது இல்லையே!… பெண்களாகிய நாம் அனைவரும் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவோம். முதலில் நம்மை எதிர்ப்பவர்களை வீழ்ச்சி அடைய செய்வோம். அனைத்துத் துறைகளிலும் அரும்பாடுபட்டு அருமையான பெண்மணி அப்படின்னு பெயர் எடுப்போம். பெண் என்பவள் சாதாரணமானவன் இல்லை. பெண் என்பவள் அனைத்தும் சாதிக்கப் பிறந்தவள்…